அவர் ஒரு சரித்திரம் -006
"அவர் ஒரு சரித்திரம்" -006 பிறந்ததிலிருந்தே தாய் தந்தையை அறிந்திராத ஒருவன் தன தாயைக் கண்டவுடன் உணர்ச்சிப் பெருக்கில் பாடும் ஒரு பாடல். "தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே" - தெய்வ மகன் படத்திலிருந்து. பாடலைப் பாடியவர் டி எம் சௌந்தரராஜன். இசை எம் எஸ் விஸ்வநாதன். இயற்றியவர் - கவியரசர். பாடலுக்கு உயிரூட்டியிருப்பவர் நடிகர் திலகம் அவர்கள். தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே தேடினேன், தேடினேன், கண்டு கொண்டேன் அன்னையை கண்டு கொண்டேன் அன்னையை இங்கு கண்டு கொண்டேன் அன்னையை என்று பாடும்பொழுது சிறிது நிறுத்தி, தான் கண்டது கனவா இல்லை நனவா என்ற திகைப்பையும் ஆச்சரியத்தையும் சில நொடிகளுக்குள் வெளிப்படுத்துகிறார் நடிகர் திலகம். தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே தேடினேன், தேடினேன், கண்டு கொண்டேன் அன்னையை கண்டு கொண்டேன் அன்னையை தெய்வமே, தெய்வமே ... ஹோ ... ஹோ பாடலின் இடையே வசனங்களில் புறக்கணிப்பட்ட மகனின் உணர்ச்சிகளை வெளிக் கொணர்வது மிகவும் தத்ரூபம். TMS பாடல் வரிகளையும் சரி, வசனங்களையும் சரி, தேவையான ஏற்ற இறக்கங்களுடன...